அருட்பெருஞ்சோதி வள்ளலார்


இன்று அக்டோபர் 5‍ ந் தேதி, அருட்பெருஞ்சோதி வள்ளலார் பிறந்த நாள். 1823 ம் ஆண்டு இதே நாள் அதாவது சுபானு ஆண்டு புரட்டாசி மாதம் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை சித்தரை நட்சத்திரம் 4 ம் பாதத்தில் மாலை 5:54 மணிக்கு பிறந்தார் வள்ளலார் என்று அழைக்கப்படும் சிதம்பரம் ராமலிங்கம்...  
வள்ளலார் தனது கையெழுத்தைப் போடும்போதெல்லாம் சிதம்பரம் ராமலிங்கம் என்றே கையெழுத்திடுவார். ஆன்மாவின் இருப்பிடம் ஆகாய பெருவெளியாகிய சிதம்பரம் என்னும் வெட்ட வெளி என்பதை ஞானத்தால் உணர்ந்தே அவர் கையெழுத்துப் போட்டுள்ளார். அவர் 5 மாத குழந்தையாக இருந்தபோதே சிதம்பர ரகசியத்தை இறைவன் வெட்ட வெளியாகக்காட்டினான் என்பதை அவர் பாடல்கள் மூலம் விளக்கி உள்ளார்.  
வள்ளலார் சுத்த தேகம்,பிரணவ தேகம், ஞான தேகம் என்னும் 3 வகை தேகசித்தியைப் பெற்றவர். தேக சித்தி பெற்ற உடம்புகள் நிலத்தில் வீழாது அவை வெளியாய் அருளில் கலக்கும். அவர்களுக்கு இனி பிறப்பு இல்லை. இந்த பிறவியில் பெற்றதே இறுதி தேகம். அப்படி நித்திய தேகம் பெற்ற வள்ளலார் 1874 சனவரி 30 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சித்தி வளாக மாளிகையில் உள்ள தனது அறையில் சோதியுடன் கலந்து அருட்பெருஞ்சோதியானார். 

அவரது சமரச சுத்த சன்மார்க கொள்கைகளுள் சில,  
* கடவுள் ஒருவரே, அவரை உண்மை அன்பால் ஒளிவடிவில் வழிபட வேண்டும்.  
* சிறு தெய்வ வழிபாடு கூடாது. அந்த தெய்வங்களின் பெயரால் உயிர்பலி கூடாது.  
*புலால் உண்ணக்கூடாது.  
*சாதி,சமயம்,மதம் என்று எந்த வேறுபாடுகளும் கூடாது.  
*ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமையை கடைபிடிக்க வேண்டும்.  
*ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய சீவகாருண்ய ஒழுக்கமே 
பேரின்ப வீட்டின் திறவுகோல்.  
*புராணங்களும்,சாத்திரங்களும் வாழ்க்கைக்கு வேண்டிய முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டது.  
*இறந்தவரை புதைக்க வேண்டும். எரிக்க கூடாது.  
*கருமாதி, திதி முதலிய சடங்குகள் கூடாது.  
*எந்த காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்.

நன்றி: தினத்தந்தி

2 comments:

Unknown said...

:-)

Unknown said...

அருட்பெருஞ்சோதி வள்ளலார் எனக்கும் பிடிக்கும் சிறந்த தொகுப்பு

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...