ஞான‌ப்பாட‌ல்!





§ எனக்கு வயது 15 இருக்கும் அது நான் 10ம் வகுப்பு படித்து வந்த நேரம். எனது தந்தை தனது ஊதியத்தில் பெரும் பாகத்தை புத்தகங்கள் வாங்கி தருவதிலேயே அதிகம் செலவிடுவார். அப்படி ஒரு நாள் எனக்கு அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுப்பு தான் கவியரசு கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்".

§ கவியரசரை பழைய திரைப்படங்களில் பாடல் எழுதியவர் என்று மட்டுமே அறிந்து இருந்த எனக்கு "அர்த்தமுள்ள இந்து மதம்" படித்ததும் வியப்பு. வாழ்வின் அனைத்து மூலைகளையும் அனுபவித்தவர் அவர் என்பதை அர்த்தமுள்ள இந்து மதத்தின் ஒவ்வொரு எழுத்துக்களும் சுட்டிக்காட்டின.


§ கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஐந்தாம் பாகம் "ஞானம் பிறந்த கதை" படித்த பொழுது தான் சைவ கோவில்களில் கரும்புடன் நின்றிருந்த பட்டினத்தாரின் பெருமை அறிந்தேன். ஆனால் அந்த வயது அவரைப் பற்றி ஓரளவே தெரிந்துகொள்ள செய்தது.


§ கால‌ம் தன் சிற‌கை யாருக்காக‌வும் மெதுவாக‌ அசைப்ப‌தில்லை. +2 முடித்து இள‌ங்க‌லை பொறியிய‌ல் சேர்ந்தேன்.... அது முடித்த‌வுட‌ன் முதுக‌லை பொறியிய‌ல். ப‌டித்த‌வுட‌ன் தொலைதொட‌ர்பு துறையில் ப‌ணி பணியில் சேருவ‌த‌ற்கான‌ நிய‌ம‌ன‌ ஆணை இன்னும் கிடைக்க‌ப் பெறாமையால் க‌ட‌ந்த‌ கால‌த்தினை அசைபோடும் பொழுது, ஒருநாள் இணைய்த்திலே வ‌ல‌ம் வ‌ரும் நேரம் என‌து வ‌குப்ப‌றை ஆசான் ம‌திப்பிற்குரிய‌ சுப்பையா அவர்க‌ளின் http://devakottai.blogspot.com/2008/03/star-posting_5939.html ப‌க்க‌த்தினுள் நுழைய நேரிட்ட‌து.மீண்டும் என்னுள் உயிர் பெற்ற‌து ப‌ட்டின‌த்தாரைப் ப‌ற்றி அறிந்து கொள்ளும் ஆர்வ‌ம்.


§ இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ப‌ட்டின‌த்தாரின் பாட‌ல்க‌ளை உங்க‌ளுட‌ன் சேர்த்து நானும் சுவைக்க‌ இந்த‌ வ‌லைப்ப‌க்க‌த்தினை ப‌ய‌ன்ப்டுத்த‌ விழைகிறேன். துவ‌க்க‌மாக‌ நான் முத‌ன் முதல் ப‌டித்த‌ ப‌ட்டின‌த்தார் பாட்டு



"நாப் பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்று மறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவு மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையிற் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல‌
அகப்ப்ட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!"



§ நான் அந்த வயதில் இந்த பாட்டினை ரசிக்க காரணம் கடையிரு வரிகள்... பிறகு காலம் செல்ல செல்ல தான் மற்ற அடிகளின் பொருளை அறிந்தேன் (இன்னும் உணரவில்லை :-)) ஒரு அற்புத‌ பாட‌லுட‌ன் மீண்டும் ச‌ந்திப்போம்,........

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...