அழகு

உன் அழகான கையெழுத்தைக் கண்டதும்
காகிதத்தை கட்டியணைக்கத் தோன்றிய‌து
உன‌து அந்த‌ ஒட்டெழுத்துக்க‌ள்
என் இதய‌மெங்கும் ஒட்டிக்கொண்ட‌து
ஒவ்வொரு வாக்கிய‌த்தினை வாசிக்கும் பொழுதும்
முற்றுப்புள்ளியே வ‌ர‌க்கூடாதென ம‌ன‌மேங்கியது
கடிதத்தின் இறுதியில் நீ இட்டிருந்த கையெழுத்து
ம‌யிலாச‌ன‌த்து கோஹினூரை ஒத்திருந்த‌து
உன் கையெழுத்து அழகு
நீ வரையும் ஓவிய‌ங்க‌ள் அழ‌கு
இறைவ‌ன் வ‌ரைந்த‌ ஓவிய‌மாகிய
நீயோ கொள்ளை அழ‌கு
உன் க‌டிதத்தை ப‌டித்த‌தும் நான்
க‌ற்றுக்கொண்ட‌து என்ன‌வெனில்
உன் பெய‌ருக்கு பொருள் அழ‌கு.....

குறிப்பு: இது முற்றிலும் க‌ற்ப‌னையே. யாரையும் தொட‌ர்புபடுத்தி எழுதப்ப‌ட்ட‌த‌ல்ல‌.

0 comments:

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...