ஜெனிவாவில் முடுக்கி விடப்பட்டு இருக்கும் அந்த துகள்கள் மோதி ஆய்வு முடிவுகள் வெளி வரும் வரை நாம் சற்று பொறுமை காப்போம். அதுவரை சில பொதுவான விசயங்களைப் பற்றி பார்ப்போம்.....
நேற்று இரவு சுமார் 2 மணி இருக்கும் தீடீரென்று என் கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாய் ஒலி வந்தது, இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தேன். நான் பயன்படுத்தும் வோடாபோன் சேவைச் செய்தி வந்துஇருந்தது. திறந்து பார்த்தால் "தாங்கள் சந்தோஸ் சுப்பரமணியத்தில் இருந்து பாடல் ஒன்றை உங்களின் அழைப்பவர் கேட்க்கும் பாடலாக தேர்வு செய்தமைக்கு நன்றி." என்று சொல்லி 35 ரூபாயை கழித்து இருந்தார்கள்.
நடு இரவில் வந்ததே எனக்கு கோபம். உடனடியாக வோடபோன் நுகர்வோர் சேவைக்கு அழைத்து கேட்டால்,5 நிமிடத்திற்கு முன் எனக்கு ஒரு தானியங்கி சேவை அழைப்பு வந்ததாகவும் அதன் மூலமாக நான் தான் அந்த பாடலை தேர்ந்தெடுத்தாக கூறி சாதித்தே விட்டனர். ஆனால் அப்படி எந்த அழைப்பும் எனக்கு வரவே இல்லை.
இதற்கு எல்லாம் என்ன காரணம் தேவை இல்லாமல் வரும் சேவை அழைப்புகள் என் கண்டு கொண்டு அப்பொழுதே எனது எண்ணை START DND என குறுந்தகவல் ஒன்றை அவர்கள் கூறிய எண்ணுக்கு அனுப்பி வைத்தேன். இன்னும் 45 நாட்களில் இது போன்ற சேவை அழைப்புகள் வருவது முற்றிலும் நின்று போகும் என தகவல் வந்தது. இருந்தும் 35 ரூபாய் வீணாய் போனதே...
ஆகவே நண்பர்களே! தாங்களும் தங்கள் எண்களை Dont Disturb பட்டியலில் இணைத்து விட்டீர்கள் என்றால் தாங்களும் இது போன்ற தானியங்கு அழைப்புகளில் இருந்தும் வங்கிகளில் இருந்து வரும் கடன் அட்டை அழைப்புகளி இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். இணையம் வழியாகவும் தொந்தரவு செய்யாதே பட்டியலில் நமது எண்ணை இணைக்க அரசு இணையதளம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது.
இதோ அதற்கான சுட்டி http://www.donotdisturb.in/
இரவு நேரத்தில் இப்படியும் ஒரு கொள்ளை!!!
Posted by ATOMYOGI at 1:16 PM 0 comments
Labels: Dont Disturb, sudhagar, இரவு நேரத்தில் இப்படியும் ஒரு கொள்ளை
பொறுமைக்கு நன்றி!
தோழர்களே! எனது பகுத்தறிவிற்க்கு எல்லை காணும் பயணத்தில் நீங்களும் என்னுடன்
சேர்ந்து பயணிக்க,கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
நமது இந்த பயணத்திற்கு உதவிடும் வகையில் ஜெனிவா வில் செயற்கை பெரு வெடிப்பு சோதனை நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
Posted by ATOMYOGI at 1:28 PM 1 comments
தேர்வை முன்னிட்டு........
வணக்கம் நண்பர்களே! DRDO தேர்வை முன்னிட்டு நான் சென்னை செல்ல வேண்டி உள்ளதாலும், அடுத்த பதிவு சிறப்பாக அமைய நன்கு தயார் செய்ய வேண்டி இருப்பதாலும்... தளத்தில் இனி வரும் 5 நாட்களுக்கும் எந்த புது பதிவுகளும் பதிப்பிக்க பட மாட்டாது.
பழைய பதிவினை படித்து பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.
Posted by ATOMYOGI at 12:32 PM 0 comments