3ஜி யும் ! ஸ்வாமிஜியும்!

         க‌ட‌ந்த‌ ப‌திவில் 3ஜி ப‌ற்றி விளக்கிவிட்டு க‌டைசி வ‌ரியில் உல‌க‌ம் அழிய‌ வாய்ப்பு இருக்குனு சொன்னாலும் சொன்னேன் சில‌‌ மெயில், நிறைய செல்பேசி அழைப்புக‌ள். எப்ப‌டி ? எப்ப‌டினு?.....


எப்ப‌டிங்குற‌துக்கு முன்னாடி......




         உலகின் முதல் 3ஜி நெட்வொர்க் 2001 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகத்தில் அதன் தகவல் பரிமாற்ற வேகம் 348 kbps. இன்றைய தேதியில் 3ஜி தகவல் பரிமாற்ற உச்சகட்ட‌ வேகம் 21Mbps. இன்னும் 2 வருடங்களில் 50 Mbps லிருந்து 100 Mbps வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

         இவ்வருட இறுதிவாக்கில் பாகிஸ்தான் மற்றூம் பங்களாதேசும் 3ஜி சேவையை அறிமுகப்படுத்தவிருக்கின்றன.

        நான் முதன்முதலில் தொலைதொடர்பு துறையில் நுழைந்தபொழுது க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber) மற்றும் 2 Mbps Stream (PCM) என்று சொல்வோம். அதைபார்த்து வாய்பிளந்த்துண்டு. இன்று என்னடாவென்றால் வீட்டுக்கொரு Fiber (Fiber To Home - FTH)அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. உங்களுக்கு தெரியுமா! ஒரு க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber)ன் கொள்ளளவு இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. இங்கு நான் ஒரு க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber)ல் 400 Gbps வரை செலுத்தி வருகிறேன்.



        சரி க‌ண்ணாடி நுண்ணிழை (Optical Fiber)பற்றி பிரிதொரு நாள் பார்ப்போம். இப்போது 3ஜி ஆல் உலகம் அழிய எவ்வாறு வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்....

        இந்த தளத்தை ஒரு பார்வை பார்த்து விடுங்கள். சுட்டி

        எங்களுக்கு தமிழ்ல சொன்னாதான் புரியும் என்பவர்கள். பிரபல பதிவுலக (சாமியார்னு சொல்லலாமா, இல்லை ஆன்மீகவாதினு சொல்லலாமா, இல்லை அகோரினு சொல்லலாமா) சரி ஏதோ ஒண்ணு. ஆனா பிரபல பதிவர். திரு.ஸ்வாமி ஓம்கார் அவர்களின் ரொம்ப பழைய ஒரு பதிவு இத படிங்க 4 பாராவை கவனிக்கவும்.

        இந்த மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி( Mobile Number Portabilty- MNP ), ஐபி டிவி ( IP TV ), மற்றும் ஜிகா போர்ட்( GE Port ) வேலைகள் நேரத்தை இறுக்குவதால் மேலதிக தகவ்லகளை இப்பதிவில் பதிவிட இயலவில்லை.Gap பார்த்து இத‌ type ப‌ண்ற‌துக்கே 3 நாள் ஆகிடுச்சு. அலைக்கற்றை ( Spectrum ) பற்றி ஒரு பதிவு ஒன்று தயார் செய்து வருகிறேன் அதில் செல்போன் கதிரியகத்தின் தீமை விளக்கப்படும். அந்த பதிவு விரைவில் வரும்.

நன்றிகள்:

        தன‌து பதிவின் சுட்டியை பயன்படுத்த அனும‌தியும் ந‌ல்ல‌ rhythemic த‌லைப்பையும் த‌ந்த‌ருளிய‌ ஸ்வாமிஜிக்கு.

ரசிக்க:

        த‌மிழின் முத‌ல் நாவ‌ல், த‌மிழின் முத‌ல் நாவ‌லா இது என்று ஆச்ச‌ர்ய‌ப‌ட‌வைக்கும் ப‌டைப்பு. ஆம்‌ மாயூர‌ம் வேத‌நாய‌க‌ம் பிள்ளை அவ‌ர்களின் பிர‌தாப‌ முத‌லியார் ச‌ரித்திர‌ம்.

சிந்திக்க:

        வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
                                                                -பான்னி ப்ளேயர்

0 comments:

Post a Comment

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...